பொலிசார் மீது இனந்தெரியாதோர் சூடு; ஒருவர் பலி

 

றிஸ்வான் சேகு முகைதீன்

குருணாகல் - புத்தளம் வீதியில் வெலகனே, மாஸ்பொத்த பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த குருணாகல் பொலிசாரின் வாகனம் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

இச்சம்பவத்தில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் இரு பொலிஸார் காயமடைந்துள்ளனர். 

குறித்த பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் சந்தேகத்திற்கிடமான வகையில் இருவர் நடமாடுவதாக நேற்று (15) இரவு பொலிஸ் அவசர இலக்கத்தின் ஊடாக குருணாகல் பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து அவர்களை கைது செய்ய சென்ற வேளையிலேயே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமைந்த பொலிசார் இருவரும் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தாக்குதலை மேற்கொண்டோர் யார் என்பது தொடர்பில் இதுவரை அறியப்படவில்லை.

இது தொடர்பான விசாரணைக்களை குருணாகல் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


Add new comment

Or log in with...