றிஸ்வான் சேகு முகைதீன்
மட்டக்குளி - சமித்புர பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வடைந்துள்ளது.
கடந்த ஒக்டோபர் 23 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் இன்று (31) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
இதன்படி இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில், குடு ரொஷான் உள்ளிட்ட 11 பேர் கடந்த செவ்வாய்க்கிழமை (25) கைது செய்யப்பட்டதோடு, அவர்களுக்கு இன்று (31) வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டது.
குறித்த சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Add new comment