இளைஞன் மரணம்; விமலின் மனைவியிடம் விசாரணை

 

றிஸ்வான் சேகு முகைதீன்

விமல் வீரவங்சவுக்கு சொந்தமான வீட்டிலிருந்த இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

விமல் வீரவங்சவிற்குச் சொந்தமான ஹோகந்தர வீட்டிலிருந்தே குறித்த இளைஞன் மரணமடைந்துள்ளார் என தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

லஹிரு ஜனித் எனும் 24 வயது இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்பதோடு, குறித்த இளைஞன் விமல் வீரவங்சவின் மகனின் நண்பர் எனவும், அவர் அடிக்கடி விமல் வீரவங்சவின் வீட்டிற்கு வருபவர் என்பதோடு, அங்கு தங்கும் வழக்கத்தையும் கொண்டவர் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (25) இரவு தூக்கத்திற்குச் சென்ற குறித்த நபர் காலை 10.00 மணி ஆகியும் தூக்கதிலிருந்து எழும்பாததை அடுத்து, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர் மரணித்துள்ளதாக தெரிவித்த வைத்திய அதிகாரிகள், அவரது மரணம் இடம்பெற்று 10 மணித்தியாலங்களுக்கு மேலாகின்றது எனவும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் விமல் வீரவங்சவின் மனைவி சசி வீரவங்ச மற்றும் மகனிடம் வாக்குமூலம் பெற்றுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகணை தலங்கம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


Add new comment

Or log in with...