சரத் குமார நவம்பர் 01 வரை விளக்கமறியலில் (Update)

 

றிஸ்வான் சேகு முகைதீன்

இன்று (24) காலை செய்யப்பட்ட முன்னாள் பிரதியமைச்சர் சரத் குமார குணரத்னவை எதிர்வரும் நவம்பர் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீர்கொழும்பு மேலதிக நீதவான் துஷ்மந்த எபிட்டவல முன்னிலையில் அவரை ஆஜர்படுத்தியபோதே நீதவான் இவ்வுத்தரவை வழங்கினார்.

நீர்கொழும்பு சில்ந்துவவில் கடந்த 2002 ஆம் ஆண்டு இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பில் முன்னாள் பிரதியமைச்சர் சரத்குமார குணரத்னவிற்கு எதிராக சட்ட மாஅதிபர் திணைக்களத்தால் அவருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்ததை அடுத்து, நீதிமன்றம் அவருக்கு பிடியாணை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


 

முன்னாள் பிரதியமைச்சர் கைது

முன்னாள் பிரதியமைச்சர் சரத்குமார குணரத்ன இன்று (24) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐ.ம.சு.முவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான இவர், கடந்த 2002 ஆம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் அவரை கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் அவர் மீது பிடியாணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று காலை அவர் பொலிசில் சரணடைந்ததை அடுத்து, அவரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகளை அடுத்து  இன்று (24) நீர்கொழும்பு நீதிமன்றில் அவரை ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கடந் பொதுத் தேர்தலின்போது, அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த ஐ.ம.சு.மு. வின் கொடிகள், பதாதைகளை அகற்றுவதற்காக வந்த பொலிஸாரின் கடமைக்கு இடைஞ்சல் விளைவித்தார் எனும் குற்றச்சாட்டில் கடந்த வருடம் இவர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...