சுசந்திகாவின் வழக்கு இணக்கசபைக்கு

 

றிஸ்வான் சேகு முகைதீன்

சுசந்திகா ஜயசிங்க மீது அவரது கணவர் தாக்குதல் மேற்கொண்டார் எனத் தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பான வழக்கை இணக்கசபைக்கு அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுசந்திகா ஜயசிங்க மீது அவரது கணவர் தாக்குதல் மேற்கொண்டார் எனத் தெரிவித்து, கடந்த ஜூன் மாதம் 18 ஆம் திகதி, தனது கணவரான தம்மிக நந்தகுமார மீது அவர் பொலிஸில் முறைப்பாடொன்றை மேற்கொண்டிருந்தார்.

இதனை அடுத்து அவரது கணவர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த வழக்கு இன்று (20) கம்பஹா பிரதான நீதவான் காவிந்தா நாணயக்கார முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதவான் குறித்த உத்தரவை வழங்கினார்.

இதேவேளை, சுசந்திகாவிற்கு பாரிய காயம் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...