பதில் பணிப்பாளர் சுநேத்ரா; தில்ருக்‌ஷி மேலதிக சொலிசிட்டராக

 

றிஸ்வான் சேகு முகைதீன்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளராக, அதன் பிரதி பணிப்பாளரக இருந்த சுநேத்ரா ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய தில்ருக்‌ஷி டயஸ் விக்ரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்திருந்ததோடு (17), நேற்று (19) ஜனாதிபதியினால் அது அங்கீகரிக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்தே, குறித்த பதவிக்கு நிரந்தர நியமனம் ஒன்றை வழங்கும் வரை தற்காலிக நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஏற்கனவே சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் கடமையாற்றி வந்த தில்ருக்‌ஷி டயஸ் மீண்டும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக தனது கடமைகளை இன்று (20) பொறுப்பேற்றுள்ளார்.


Add new comment

Or log in with...