Monday, October 3, 2016 - 12:32pm
றிஸ்வான் சேகு முகைதீன்
முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணை பிரிவில் (FCID) ஆஜராகியுள்ளார்.
அவர் ஆளுநராக இருந்த காலத்தில் மத்திய வங்கியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்கும் பொருட்டே அவர் இன்று (03) அங்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அஜித் நிவார்ட் கப்ரால் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2015 ஜனவரி மாதம் வரை, 9 வருடங்களாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கடமைபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment