குளவி கொட்டுக்கு இலக்காகிய 20 பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நோர்வூட் எல்பட தமிழ் வித்தியாலய மாணவ, மாணவிகளே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
எல்பட வித்தியாலயத்திற்கு அருகில், மரமொன்றிலிருந்த குளவிக் கூடு கலைந்ததனால், பாடசாலைக்கு வந்த மாணவர்களை குளவி கொட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தில் 11 மாணவிகள் மற்றும் 9 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் தரம் 8, 9 ஆம் வகுப்புகளில் கல்வி பயிலுபவர்கள் என்பதோடு, ஆசிரியை ஒருவரும் இந்த குளவித் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று (21) மாலை முதல், குறித்த மரத்தில் குளவிகள் கூடு கட்ட ஆரம்பித்திருந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வித்தியலய அதிபர் மைக்கல்ராஜ் தெரிவித்தார்
பாதிக்கப்பட்ட மாணவர்கள், பொகவந்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
(நோட்டன் பிரிட்ஜ் நிருபர் - மு.இராமசந்திரன்)
Add new comment