லசந்தவின் சடலத்தை தோண்டியெடுத்து விசாரணை

 

றிஸ்வான் சேகு முகைதீன்

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியரும் பிரபல ஊடகவியலாளருமான லசந்த விக்ரமதுங்கவின் உடலை, மீண்டும் தோண்டி எடுக்க கல்கிஸ்ஸை நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

குறித்த கொலை தொடர்பிலன மேலதிக விசாரணைகளை நடாத்தும் பொருட்டு பொலிஸாரால் இன்று (08) விடுக்கப்பட்டவேண்டுகோளை அடுத்தே நீதிமன்றம் இவ்வனுமதியை வழங்கியது.

அதன் அடிப்படையில் இம்மாதம் 27 ஆம் திகதி, லசந்தவின் உடலை தோண்டியெடுத்து மற்றுமொரு பிரேத பரிசோதனையை மேற்கொண்டு விசாரணைகளை நடாத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

 


Add new comment

Or log in with...