றிஸ்வான் சேகு முகைதீன்
பெண் ஒருவரால், தனியார் வங்கி ஒன்றிலிருந்து மீளப் பெறப்பட்ட ரூபா 18 இலட்சத்திற்கும் அதிகமான (ரூபா 18,60,914) பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (22) நண்பகல் வேளையில், குறித்த பணத்தை அம்பலாங்கொட நகரின் அரச வங்கி ஒன்றில் வைப்பிடுவதற்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ள வேளையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், கூரிய ஆயுதத்தை காட்டி, குறித்த பெண்ணை மிரட்டி இவ்வாறு பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Add new comment