தொடரும் முழு முக தலைக்கவச பாவனைக்கான ஆதரவு

 

றிஸ்வான் சேகு முகைதீன்

மோட்டார் சைக்கிள் ஒட்டுனர்கள் முழு முகமும் மறைக்கும் வகையிலான ஹெல்மெட்களை (Full Face Helmets) பயன்படுத்துவதற்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை அமுல்படுத்துவதற்கு எதிரான இடைக்கால தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இன்று (03) எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குறித்த தடைக்கு எதிரான இடைக்காலத் தடையை எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதிவரை நீடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

கொள்ளைச் சம்பவங்கள் உட்பட பல்வேறு சட்டவிரோதச் செயல்களுக்கு துணைபுரிவதாகக் கருதி கடந்த வருடம் மார்ச் 21 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் பொலிஸ் திணைக்களம் முழு முகம் மூடிய தலைக்கவசங்களுக்கு தடை விதிப்பதாக சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

பொலிஸாரால் எடுக்கப்பட்ட குறித்த சுற்றறிக்கைக்கு எதிராக 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...