பசில் ராஜபக்‌ஷ மீண்டும் கைது

 
Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்
 
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ இன்று (06) மீண்டும் கைது செய்யப்பட்டார்.
 
கம்பஹாவிலுள்ள காணி ஒன்று தொடர்பான கொடுக்கல் வாங்கல் தொடர்பிலேயே, பொலிஸ் நிதி மோசடி தொடர்பான விசாரணை பிரிவு அவரைக் கைது செய்துள்ளது.
 
ஏற்கனவே கடந்த மே மாதம் 12 ஆம் திகதி பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் (FCID)  கைது செய்யப்பட்டு அன்றைய தினம், பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தற்போது பூகொட நீதிமன்றில் அவரை ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
 
நாமல் விசாரணை
 
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ, வாக்குமூலம் வழங்குவதற்காக, பொலிஸ் நிதி மோசடிப் பிரிவில்  இன்று (06) ஆஜராகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...