Thursday, May 26, 2016 - 11:30am
Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்
கடற்படையைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவரை வைபமொன்றில் வைத்து, பிரமுகர்கள் மத்தியில் திட்டியதாக தெரிவிக்கப்படும் சம்பவத்தை அடுத்து, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் வைபவங்களில் கலந்துகொள்ளப் போவதில்லை என இலங்கை முப்படை முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர், முப்படையின் முகாம்களுக்கு நுழைவதற்கும் இடமளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை, சம்பூர் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற வைபவமொன்றின்போதே குறித்த சம்பவம் இடம்பெற்றிருந்ததோடு, அவ்வைபவத்தில் இலங்கைக்கான அமெரிக்க தூதர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் உள்ளிட்டோர் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது குறித்தான வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றதோடு, அதில் முதலமைச்சர் குறித்த அதிகாரியை திட்டும் காட்சி மாத்திரம் உள்ளடங்கியிருக்கின்றது.
குறித்த காட்சி தொடர்பில் சமூக வலைத்தளங்களில், பலரும் பலவிதமான (எதிர்ப்புத் தெரிவித்தும் ஆதரவு தெரிவித்தும்) கருத்துகளை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த காட்சி வருமாறு அமைகின்றது.
There is 1 Comment
ஹாபீஸ் நசீர் கடற்படை
Add new comment