Thursday, February 25, 2021 - 11:36am
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை இன்று (25) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன, குறித்த அறிக்கையை இன்று (25) பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து, அது தொடர்பில் மூன்று நாள் விவாதமொன்றை வழங்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்ல கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment