Tuesday, January 19, 2021 - 3:28pm
அரசாங்க நிதி பற்றிய குழுவிற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம, மனுஷ நாணயக்கார ஆகியோர் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இன்று (19) சபையில் அறிவித்தார்.
இக்குழுவின் உறுப்பினர்களாகச் செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சமிந்த விஜயசிறி, ஹேஷா விதானகே ஆகியோர் அக்குழுவிலிருந்து இராஜினாமாச் செய்த பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, தெரிவுக் குழுவினால் பரிந்துரைக்கப்படட புதிய உறுப்பினர்கள் இருவருடைய பெயரையே சபாநாயகர் சபையில் அறிவித்தார்.
Add new comment