மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க எவரது அனுமதியும் தேவையில்லை

ஊடக சந்திப்பில் M.K.சிவாஜிலிங்கம்

நவம்பர் 27 மாவீரர் தின நினைவேந்தலை மேற்கொள்வதற்கு நாம் யாரிடமும் அனுமதிபெற தேவையில்லை என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களை நினைவு கூருவதனை யாரும் தடுக்க முடியாது. அதே போல எமது குடும்ப உறுப்பினர்களை நினைவு கூருவதற்கு நாம் யாரிடமும் அனுமதியும் பெறதேவையில்லை. எனவே எதிர்வரும் நவம்பர் 27 மாவீரர் தினம் நினைவேந்தல் நிகழ்வு வழமைபோல் இடம்பெறும்.

எத்தடை வரினும் அத் தடையை உடைத்து மக்கள் அனைவரும் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப ஒன்று கூடி இந்த மாவீரர் தின நிகழ்வை வழமைபோன்று நடத்துவோம், நம்மை கைது செய்தால் கைது செய்யட்டும் ஆனால் மாவீரர் தின நிகழ்வை நடாத்துவோம் என்றார்.


Add new comment

Or log in with...