Saturday, November 7, 2020 - 3:40pm
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரியான ஸஹ்ரான் ஹாசிமின் மனைவியான பாத்திமா சாதியாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையில் கொரோனா தொற்றுடையவர்களாக அடையாளம் காணப்பட்ட கைதிகளில் அவரும் உள்ளடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அவர் வெலிக்கந்தை கொவிட்-19 வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
Add new comment