மைத்திரி 4ஆவது நாளாக ஏப். 21 ஆணைக்குழுவில் வாக்குமூலம்

மைத்திரி 4ஆவது நாளாக ஏப். 21 ஆணைக்குழுவில் வாக்குமூலம்-Maithripala Sirisena 3 Hr Statement to th PCoI-Easter Sunday Attack

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சுமார் 3 மணி நேரம்  வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (17) முற்பகல் ஆஜராகியிருந்ததோடு, இவ்வாறு அவர் வாக்குமூலம் வழங்கும் நான்காவது நாள் இதுவாகும்.

இறுதியாக நேற்றுமுன்தினம் (15) ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கிய அவர், பல்வேறு முரணான வாக்குமூலங்களை வழங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் எதிர்வரும் ஒக்டோபர் 22ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...