அமெரிக்காவின் நியூயோர்க் மாநில மதுக் கூடத்தில் முகக் கவசம் அணியச் சொன்ன 80 வயது முதியவரைக் கொன்றதாக ஆடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
65 வயது டொனல்ட் லியுவின்ஸ்கி 80 வயது ரோக்கா சாப்பியன்ஸாவுக்கு மரணத்தை விளைவித்த குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
மதுக் கூடத்தில் முகக் கவசம் அணியாமல், அங்குள்ள ஊழியர்களிடம் மரியாதைக் குறைவாகப் பேசியதால் லியுவின்ஸ்கிக்கும் முதியவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் லியுவின்ஸ்கி முதியவரைத் தள்ளி அவர் கீழே விழுவது வீடியோவில் பதிவானது.
சுயநினைவிழந்த முதியவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். தலையில் ஏற்பட்ட காயங்களால் சில நாட்களுக்குப் பின்னர் அவர் உயிரிழந்தார்.
வாக்குவாதம் ஏற்பட்டபோது இருவரும் போதையில் இருந்தனரா என்பது தெரியவில்லை. கொலைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் லியுவின்ஸிக்கு 4 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
Add new comment