Thursday, May 14, 2020 - 6:18pm
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது மூன்று மாத சம்பளத் தொகையான 292,500.00 ரூபாவை கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அதற்கான காசோலை ஜனாதிபதியினால் இன்று (14) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவிடம் கையளிக்கப்பட்டது.
Add new comment