கொரோனாவினால் இத்தாலியில் இலங்கையர் எவரும் மரணிக்கவில்லை!

இத்தாலியின் மெஸ்ஸினா நகரிலுள்ள 'கிறிஸ்டோரே' நோயாளர் பராமரிப்பு நிலையத்திலிருந்த இலங்கையர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படும் தகவலில் உண்மை இல்லை என, இத்தாலியிலுள்ள இலங்கைக்கான பதில் தூதுவர் சிசிர செனவிரத்ன தெரிவித்தார்.

குறித்த நோயாளர் பராமரிப்பு நிலையத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளிகள் சிலர் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஆனால் இலங்கையர்கள் எவரும் அங்கு இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...