பாடசாலைகளுக்கு மார்ச் 13 - ஏப்ரல் 20 வரை விடுமுறை

பாடசாலைகளுக்கு மார்ச் 13 - ஏப்ரல் 20 வரை விடுமுறை-Coronavirus-School Holiday From Mar 13-Apr20

அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (13) முதல் எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதி வரை பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் டளஸ் அளகப்பெரும தெரிவித்தார்.

இன்று (12) பிற்பகல் இசுறுபாயவிலுள்ள கல்வியமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அதற்கமைய முதலாம் தவணை விடுமுறையை முன்கூட்டியே வழங்கும் வகையில் அனைத்து  பாடசாலைகளுக்கும் மார்ச் 13 - ஏப்ரல் 20 வரை பாடசாலை விடுமுறை வழங்கப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


Add new comment

Or log in with...