குவைத்தில் இன்னல்களுக்குள்ளான 46 பேர் நாடு திரும்பினர்

குவைத்தில் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளான இலங்கைப் பணிப்பெண்கள் 46 பேர் இன்று (14) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

UL 230 ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் இவர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

இலங்கைக்கான குவைத் தூதரகம் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட இவர்கள் நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் வசிப்பவர்கள் ஆவர். இவர்களில் பெரும்பாலானோர் அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை பகுதிகளில் வசிப்பவர்கள் ஆவர்.

நாடு திரும்பிய அவர்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் பொறுப்பேற்கப்பட்டு பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.     


Add new comment

Or log in with...