இலங்கைக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ள பிரித்தானியா

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, இலங்கைக்கான பயண எச்சரிக்கையை பிரித்தானிய வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவலகம் விடுத்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் மிகத் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், அது ஏனைய நாடுகளுக்கும் பரவி வருவதால் முன்னெச்சரிக்கையாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் சீனப் பெண் ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளமை உறுப்படுத்தப்பட்டுள்ளதனால் இந்நடவடிக்கை எடுத்துள்ளதாக குறித்த அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆயினும் குறித்த வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்காக இலங்கை அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...