வயதெல்லை பாராது அரச தொழில் வாய்ப்புகள்

அரச தொழிலுக்கான வயதெல்லையைப் பாராது அரசாங்கம் தொழில் வாய்ப்புகளை வழங்குமெனவும் வயதெல்லையில் மாற்றம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் இராஜாங்க அமைச்சர் ஜோன் செனவிரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அது தொடர்பில் அரசாங்க தொழில் ஆணைக்குழுவில் அனுமதி பெற்று பின்பு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சபையில் குறிப்பிட்டார். 

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் சித்தியடையாத ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அவர் கூறினார்.   அரசாங்கம் வழங்குவதாக உறுதியளித்துள்ள வேலைவாய்ப்புக்கள் தொடர்பில் எதிர்க்கட்சியினர் நேற்று சபையில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்  


Add new comment

Or log in with...