கொழும்பு பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 12 மாணவர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை (08) கொழும்பு பல்கலைக்கழகத்தின் இரு மாணவர்கள் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
குறித்த மாணவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (10) கைது செய்யப்பட்டு, சனிக்கிழமை (11) புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களுக்கு நேற்று (13) வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டதோடு, நேற்றையதினம் மீண்டும் இன்று (14) வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டது.
குறித்த தாக்குதலில் காயமடைந்த இருவரும் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Add new comment