சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூவர் கைது

சட்டவிரோதமீன்பிடி வலையைப் பயன்படுத்திமீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் புத்தளம், பூக்குளம்பகுதியில் மீனவர்கள் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் கடற்படையினரால் நேற்று (13) மேற்கொள்ளப்பட்ட வழமையான ரோந்து நடவடிக்கையின்போதே, மேற்படி மீனவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல்வேறு தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் சட்டவிரோதமான மீன்பிடியைக் கட்டுப்படுத்த கடற்படையினர் செயற்பட்டு வருகின்றனர்.

இதற்கமைய புத்தளம், பூக்குளம் கடற்கரைப் பகுதியில் கடற்படையினர் முன்னெடுத்த ரோந்து நடவடிக்கையின்போது குறித்த மீனவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு இவர்களிடமிருந்து டிங்கிப் படகொன்று, தடை செய்யப்பட்ட மீன்பிடி வலையொன்று, எஞ்சின் ஒன்று ஆகியற்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

31 முதல் 35 வயதுடைய கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட மீன்பிடி உபகரணங்களுடன் சந்தேகநபர்கள், மேலதிக நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்பிடி பரிசோதனைத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...