259
அஹுங்கல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அஹுங்கல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹோட்டல் ஒன்றிற்கு முன்பாக குறித்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது கொஸ்கொட பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதோடு , சந்தேகநபர்களை கைது செய்ய அஹுங்கல்ல பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.