அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் அம்பாறை மாவட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 2024 ஆம் ஆண்டுக்கான நாட்காட்டி மற்றும் நாட்குறிப்பேடு வெளியீட்டு வைக்கப்பட்டது. அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் அம்பாறை மாவட்ட சம்மேளனத்தின் தலைவர் ஏ.மாபீர் தலைமையில் ஒலுவில் கிறீன் விளாவில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இந்நிகழ்வில் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் முன்னாள் தேசிய தலைவர் எம்.ஐ.உதுமாலெப்பை மற்றும் மாவட்ட பிரதம ஆலோசகர் ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.ஆதம்பாவா ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டு 2024 ஆம் ஆண்டுக்கான நாட்காட்டி மற்றும் நாட்குறிப்பேட்டை வெளியீட்டு வைத்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் அம்பாறை மாவட்ட சம்மேளனத்தின் செயலாளர் எம்.எச்.ஏ.வஹாப், மாவட்ட தலைவி றிபா முஸ்தபா, மாவட்டப் பொருளாளர் ஐ.அஹமட் ஸிறாஜ், மாவட்ட முன்னாள் தலைவர் (ஐ.பீ.பீ) எம்.ஐ.எம்.றியாஸ் முன்னாள் தலைவர்களான எம்.எம்.அஜ்வத், யூ.எம்.நியாஸி, பாலமுனை பாறூக், உட்பட முன்னாள் மாவட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆலோசகர்கள் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
(ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்)நாட்காட்டி, நாட்குறிப்பேடு வெளியீடு
75