Friday, April 19, 2024
Home » களுவாஞ்சிக்குடியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு

களுவாஞ்சிக்குடியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு

by damith
January 9, 2024 5:55 am 0 comment

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் கீழுள்ள பகுதிகளைக் கண்காணித்து டெங்கு ஒழிப்புச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி அ.உதயசூரியாவின் தலைமையில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அபயவிக்கிரம, பொதுசுகாதார பரிசோதகர்கள் பொலிஸார், உள்ளிட்ட பலரும் ஒன்றிணைந்து இந்நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இக்குழு வீடு வீடாகச் சென்று டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை அடையாளம் கண்டு பொதுமக்களின் உதவியுடன் அவற்றை அகற்றிவருவதுடன், தேங்கி நிற்கும் வெள்ள நீரையும் வெளியேற்றுவதற்குரிய ஆலோசனைகளையும் வழங்கிவருகின்றனர். இந்நிலையில் டெங்கு நுளம்பு பெருகும் சூழலை வைத்திருந்தவர்கள் எச்சரிக்கப்பட்டதுடன், ஒலிபெருக்கி மூலம் மக்கள் இதுதொடர்பில் அறிவுறுத்தப்பட்டனர்.

(பெரியபோரதீவு தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT