சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 11ஆம் திகதி நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இது அலுவலக மட்ட பிரதிநிதிகளின் வருகையாகும் என தெரிவித்துள்ள அவர், இப்பிரதிநிதிகள் குழு இலங்கையில் தங்கியுள்ள காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நிதியமைச்சின் அதிகாரிகள், மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகள், எரிசக்தி மின்சக்தி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் முக்கிய நிறுவனங்கள் சிலவற்றின் பிரதிநிதிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் ஒத்துழைப்பு வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் சாத்தியமான மட்டத்தை அடைந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள இராஜாங்க அமைச்சர், இந்த வகையில் தொடர்ந்து முன்னோக்கி பயணிப்பதற்கும் மேற்படி கடன் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது பின்பற்ற வேண்டிய செயற்பாடுகள் தொடர்பிலும் நாட்டுக்கு வருகை தரும் பிரதிநிதிகள் பேச்சு வார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்