Friday, April 19, 2024
Home » இ.போ. சபைக்கு 66 வருடம் பூர்த்தி அநுராதபுரத்தில் விசேட சமய நிகழ்வு

இ.போ. சபைக்கு 66 வருடம் பூர்த்தி அநுராதபுரத்தில் விசேட சமய நிகழ்வு

by damith
January 8, 2024 9:36 am 0 comment

இலங்கை போக்குவரத்து சபையின் 66 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அநுராதபுரம் ருவன்வெலி சாயவில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தலைமையில் விசேட சமய நிகழ்ச்சி நடைபெற்றது.

நாட்டுக்கும், மக்களுக்கும், நிறுவனத்துக்கும் ஆசி வழங்கும் முகமாக ருவன்வெலிசாயவில் கப்ருக்க பூஜை நடத்தப்பட்டதுடன், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து இ.போ.ச டிப்போக்களிலிருந்தும் ருவன்வெளி சாயவிற்கு 750 க்கும் மேற்பட்ட அட்டபிரிக்கர சமர்ப்பிக்கப்பட்டு விசேட ஆசிர்வாத பூஜையும் நடைபெற்றது.

ருவன்வெலிசாய சைத்தியராமாதிபதி, சாஸ்த்ரபதி வணக்கத்துக்குரிய ஈத்தலவெட்டுனுவெவே ஞானதிலக நாயக்க தேரரின் ஆலோசனைக்கமைய, வத்தேவெவே சுமண நாயக்க தேரரால் சமய வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

ருவன்வெலிசாய சைத்தியாராமதிபதி, சாஸ்த்ரபதி பூஜ்ய ஈதனவெட்டுனு வெவே ஞானதிலக நாயக்க தேரரரின் வேண்டுகோளுக்கிணங்க, அநுராதபுரம் புகையிரத நிலையத்திலிருந்து ஜய ஸ்ரீ மஹாபோதி, லோவமஹாபாய, ருவன்வெலிசாய, ஜேதவனாராமய, அபயகிரிய, லங்காராமய, மிரிஸ்ஸவெட்டிய ஆகிய இடங்களுக்கு வழிபாடு செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக இலங்கை போக்குவரத்து சபையால், புதிய பஸ் வண்டி பயணமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT