Friday, March 29, 2024
Home » அநுராதபுரத்தில் 219 பேருக்கு நிரந்தர நியமனம்

அநுராதபுரத்தில் 219 பேருக்கு நிரந்தர நியமனம்

by damith
January 8, 2024 10:33 am 0 comment

அநுராதபுரம் மாவட்டத்தில் கடமையாற்றிய பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்கள் 219 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு வடமத்தியமாகண ஆளுநர் மஹிபால ஹேரத் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டு கடந்த காலங்களில் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட குழுவினருக்கு 2023 டிசம்பர் 31ம் திகதிக்கு முன்னர் நிரந்தர நியமனம் வழங்கிவைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய ஆலோசனைக்கிணங்க இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி 72 சாரதி நியமனங்கள், சுகாதார துணை மின் நிலையில் 18 நியமனங்கள், 18 சுகாதார தொலைபேசி நியமனங்கள், 05 சுகாதார தொலைபேசி நடத்துனர் நியமனங்கள் உட்பட ஏனைய நியமனங்கள் மாகாண சபை அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதன் போது மாகாண பிரதான செயலாளர், ஆளுநரின் செயலாளர், பல்நோக்கு திணைக்களத்தின் பணிப்பாளர் மேஜர் ஏ.எம்.லசந்த கபில குமார உட்பட மாகாண சபை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT