Friday, March 29, 2024
Home » தீயில் எரிந்து நாசமான மீன்வாடி

தீயில் எரிந்து நாசமான மீன்வாடி

by Prashahini
January 7, 2024 5:36 pm 0 comment

உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரிபாடு கிராமத்தில் உள்ள மீன்வாடியில் நேற்று (6) இரவு 8.00 மணியளவில் திடீரென ஏற்பட்ட தீயினால் மீன்வாடி முழுமைாக தீக்கரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.

சம்பவம் நடந்த போது, மீனவர்கள் தொழில் முடிந்து வீட்டுக்குச் சென்ற பின்னர் அந்த வாடியில் காவலாளி மட்டுமே இருந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் போது அந்த மீன்வாடி திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதுடன், அருகில் உள்ளவர்கள் உடனடியாக அங்கு வருகை தந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

எனினும், தீயினால் குறித்த மீன்வாடி முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், அந்த வாடியில் இருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் தீக்கரையாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரனைகளை உடப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT