Thursday, March 28, 2024
Home » காத்தான்குடியில் சமைத்த உணவுகள் வழங்கி வைப்பு
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு

காத்தான்குடியில் சமைத்த உணவுகள் வழங்கி வைப்பு

by Gayan Abeykoon
January 4, 2024 7:06 am 0 comment

காத்தான்குடி ஆறாம் குறிச்சி ஹைராத் நகரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தற்காலிக இடங்களில் தங்கியுள்ள மக்களுக்கு காத்தான்குடி ஆறாம் குறிச்சி ஹைராத் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் நேற்று சமைத்த உணவு வழங்கப்பட்டது.

காத்தான்குடி கிராம உத்தியோகத்தர் பிரிவில் வெள்ளம் வீடுகளுக்கு ஏறி உணவு சமைக்க முடியாத குடும்பங்கள் மற்றும் ஹைராத் நகரில் வெள்ளம் ஏறிய குடும்பங்கள் என 600 குடும்பங்களுக்கு இதன்போது பகல் சமைத்த உணவு வழங்கி வைக்கப்பட்டன.

இதனை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே. ஜே முரளிதரன் நேரடியாக சென்று ஆரம்பித்து வைத்தார்.

ஹைராத் பள்ளிவாயலின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலாளர் உதய சிறீதர், மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இதன்போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே முரளிதரன் மாவட்டத்தின் வெள்ள நிலைமை தொடர்பாகவும் கருத்து தெரிவித்தார்.

(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT