இனிய நந்தவனம் மாத சஞ்சிகை 27ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டிற்குச் செல்லும் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர், தினகரன் – வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் தே.செந்தில் வேலவர் ஆகியோருக்கு திருச்சிராப்பள்ளி ரோட்டரி கிங்ஸ் சார்பில் எதிர்வரும் சனிக்கிழமை (06) மாலை வரவேற்பளிக்கப்படவுள்ளது.
ரோட்டரி கிங்ஸ் தலைவர் தங்கவேல் தலைமையில் நடைபெறும் நிகழ்வில் மீடியா பப்ளிக் ஆபிசர் மேஜர் டோனர், டாக்டர் கே.சீனிவாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து சிறப்பிப்பார். மாவட்டச் செயலாளர் (நிகழ்ச்சி) ரோட்டரி மாவட்டம் – 3000 கிருஸ்ணமூர்த்தி வாழ்த்துரை வழங்க நந்தவனம் சந்திரசேகரன் அறிமுகவுரையாற்றுவார். விழாவுக்கான ஏற்பாடுகளை சங்கச் செயலாளர் ராம் பிரகாஷ் மற்றும் பொருளாளர் ரூபன் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.