Thursday, April 25, 2024
Home » டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
பரீட்சை நிலையங்களில்

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

by Gayan Abeykoon
January 4, 2024 7:12 am 0 comment

க.பொ.த உயர்தர பரீட்சை நிலையங்களாக செயற்படவுள்ள பாடசாலைகளில் பரீட்சாத்திகளின் நலன் கருதி டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டமொன்று மூதூர் சுகாதார பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டது.

மூதூர் சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தினால் இருதினங்கள் டெங்கு நுளம்புகளை ஒழிப்பதற்காக புகை அடிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக சுகாதார வைத்தியதிகாரி டொக்டர். முஹைதீன் பாவா ஹில்மி தெரிவித்தார்.

இதன்போது தோப்பூர், கிளிவெட்டி மற்றும் மூதூர் பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ள பரீட்சை நிலையங்களாக செயற்படவுள்ள பாடசாலைகளுக்கு புகை அடிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

(தோப்பூர் குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT