111
க.பொ.த உயர்தர பரீட்சை நிலையங்களாக செயற்படவுள்ள பாடசாலைகளில் பரீட்சாத்திகளின் நலன் கருதி டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டமொன்று மூதூர் சுகாதார பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டது.
மூதூர் சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தினால் இருதினங்கள் டெங்கு நுளம்புகளை ஒழிப்பதற்காக புகை அடிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக சுகாதார வைத்தியதிகாரி டொக்டர். முஹைதீன் பாவா ஹில்மி தெரிவித்தார்.
இதன்போது தோப்பூர், கிளிவெட்டி மற்றும் மூதூர் பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ள பரீட்சை நிலையங்களாக செயற்படவுள்ள பாடசாலைகளுக்கு புகை அடிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
(தோப்பூர் குறூப் நிருபர்)