Thursday, March 28, 2024
Home » கரடியனாறு பிரதேசத்தில் யுக்திய சுற்றிவளைப்பு

கரடியனாறு பிரதேசத்தில் யுக்திய சுற்றிவளைப்பு

by Gayan Abeykoon
January 4, 2024 7:47 am 0 comment

யுக்திய போதை ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் ஏ எதிரிமானவின் ஆலோசனையின் பேரில் மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவின் பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் மோப்ப நாய் சகிதம் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

கஞ்சா விற்பனை செய்யப்படும் வீடு மற்றும் கஞ்சா செடிகள் உற்பத்தி செய்யப்படும் இடங்கள் என சந்தேகிக்கப்படும் பிரதேசங்களில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(மட்டக்களப்பு குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT