கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் சுமார் இரண்டு வருடங்கள் பிராந்திய பணிப்பாளராக பணியாற்றி பெரும் சேவையாற்றிய வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் சுகாதார சேவைகள் பணிமனையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்களினால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகிலா இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிராந்திய பிரிவு தலைவர்கள், பிராந்திய சுகாதார நிறுவனங்களின் தலைவர்கள், பணிமனையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக சுமார் இரண்டு வருடங்கள் பணியாற்றி அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள அவரின் சேவை மற்றும் திறமைகளை பாராட்டி பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
(பாலமுனை கிழக்கு தினகரன் நிருபர்)