Friday, March 29, 2024
Home » போதகர் ஜெரோம் பெனாண்டோவுக்கு பிணை

போதகர் ஜெரோம் பெனாண்டோவுக்கு பிணை

- டிசம்பர் 01 கைதாகி 34 நாட்களின் பின் விடுதலை

by Rizwan Segu Mohideen
January 3, 2024 11:38 am 0 comment

போதகர் ஜெரோம் பெனாண்டோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்றையதினம் (03) முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

மதங்களை இழிவுபடுத்தும் வகையில் வெளியிட்ட கருத்து தொடர்பான குற்றச்சாட்டில் கடந்த டிசம்பர் 01ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

அதற்கமைய ரூ. 5 இலட்சம் ரொக்கம் மற்றும் தலா ரூ. 10 மில்லியன் கொண்ட 2 சரீர பிணைகளில் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆயினும் அவர் நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் தடையுத்தரவு விதித்துள்ளது.

மதங்களை அவமதிக்கும் வகையில் கருத்து வௌியிட்ட குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த நவம்பர் 30ஆம் திகதி வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) முன்னிலையாக 8 மணித்தியால வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து 2ஆவது நாளாக டிசம்பர் 01ஆம் திகதியும் வாக்குமூலம் வழங்க CIDயில் முன்னிலையான வேளையில், போதகர் ஜெரோம் பெனாண்டோ கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

போதகர் ஜெரோம் பெனாண்டோவுக்கு மேலும் 7 நாட்கள் விளக்கமறியல்

CID சென்ற போதகர் ஜெரோம் பெனாண்டோ கைது

போதகர் ஜெரோம் CIDயில் 08 மணி நேர வாக்குமூலம்

இலங்கை வந்தார் போதகர் ஜெரோம் பெனாண்டோ

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT