மட்டக்களப்பின் புதிய கல்லடிப் பாலத்துக்கு அருகில் ராமகிருஷ்ணமிஷனை ஸ்தாபித்த சுவாமி விவேகானந்தருக்கு உருவச்சிலை அமைப்பதற்கான அடிக்கல் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (01) நாட்டப்பட்டது.
ஸ்ரீராமகிருஷ்ணமிஷன் நூற்றாண்டு நிறைவு விழா தொடரையிட்டு அடிக்கல் நாட்டப்பட்டதுடன், மட்டக்களப்பு ராமகிருஷ்ணமிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ் அடிக்கல்லை நாட்டி வைத்தார். இந்நிகழ்வில் ராமகிருஷ்ணமிஷன் உதவி பொது முகாமையாளர், மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன், முன்னாள் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், மட்டக்களப்பு உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் கணேசராசா உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
விபுலானந்த அடிகளாரினால் ஸ்ரீராமகிருஷ்ணமிஷனின் இலங்கை கிளை ஸ்தாபிக்கப்பட்டது.
மட்டக்களப்புகுறூப், மட்டக்களப்பு விசேட நிருபர்கள்