Thursday, March 28, 2024
Home » ‘யுக்திய’ சுற்றி வளைப்புகளால் நிரம்பி வழியும் சிறைச்சாலைகள்

‘யுக்திய’ சுற்றி வளைப்புகளால் நிரம்பி வழியும் சிறைச்சாலைகள்

கைதிகளை தடுத்து வைக்க மாற்று கட்டடங்கள்

by Gayan Abeykoon
December 29, 2023 9:33 am 0 comment

‘யுக்திய’ நடவடிக்கையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சிறைச்சாலைகள் நிரம்பி வழிவதாகவும், கைதிகளை மாற்று கட்டடங்களில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

யுக்திய நடவடிக்கை தொடங்கியதிலிருந்து நாடு முழுவதுமுள்ள இருபத்தெட்டு சிறைகளில் 02 ஆயிரத்து இருநூற்று ஐம்பத்தைந்துக்கும் மேற்பட்ட புதிய கைதிகள் வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், நீதி நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் நாட்டின் சிறைச்சாலைகளில் இருபத்தெட்டாயிரம் கைதிகள் இருந்ததாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்திருந்தார். பொதுவாக இந்நாட்டின் சிறைகளில் சுமார் 11,000 பேர் தடுத்து வைக்கப்படலாம். இதேவேளை, பெண் கைதிகளின் எண்ணிக்கையும் 800 இருந்து 1,124ஆக அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT