Friday, April 26, 2024
Home » பொத்துவிலில் சுனாமி நினைவு தினம் அனுஷ்டிப்பு

பொத்துவிலில் சுனாமி நினைவு தினம் அனுஷ்டிப்பு

by Gayan Abeykoon
December 29, 2023 7:12 am 0 comment

சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து பத்தொன்பது ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு நாடு முழுவதும் ஞாபகார்த்த நிகழ்வுகளும் சமய அனுஷ்டானங்களும் நடாத்தப்பட்ட அதேவேளை பொத்துவில் மக்களும் இத்தினத்தை மிக உணர்வுபூர்வமாக நேற்றுமுன்தினம் மாலை நினைவு கூர்ந்தனர்.

பொத்துவில் ஆட்டோ உரிமையாளர் சங்கம் மற்றும் அறுகம்பே கிளீன் ஸ்ரீ லங்கா அமைப்பினரும் ஒருங்கிணைந்து இங்குள்ள சமூகசேவை அமைப்புகளுடன் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

சின்ன உல்லை மஸ்ஜிதுல் அக்சா ஜும்மா பள்ளிவாசலில் ஆட்டோ உரிமையாளர் சங்க தலைவர் எ.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம் முஷாரப்பும் கலந்து கொண்டார்..

ஜம்மியத்துல் உலமா சபையின் அக்கரைப்பற்று கிளையின் தலைவர் கலாநிதி அகில இலங்கை எம்.ஐ.எம். சித்தீக்கின் விசேட சொற்பொழிவு முக்கிய அம்சமாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் மௌலவி எம்.எம்.அப்துல் கையூம் விசேட துஆப் பிரார்த்தனையும் ஜம்மியத்துல் உலமா சபையின் பொத்துவில் கிளை தலைவர் மௌலவி எ.மொஹிடீன் பாவா உட்பட உலமா சபையின் உறுப்பினர்கள், பள்ளிவாசல் தலைவர்கள், அரபுக்கல்லூரி அதிபர்கள், மற்றும் வர்த்தக பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

(அட்டாளைச்சேனை குறூப் நிருபர் )

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT