151
எம்பிலிபிட்டிய சூரியவெவ கெம்ஹத புராண ரஜமஹா விகாரையில் புதையல் தோண்டிய ஆறு பேரை சூரியவெவ விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் நேற்று (28) கைது செய்துள்ளனர். அதிரடிப்படை முகாமுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளதுடன் அவர்கள் அதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
விகாரைக்கு அண்மித்ததாக அமைந்துள்ள குளத்தின் அருகில் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர்கள் நமடகஸ்வெவ துங்கம. சூரியவெவ,செவனகல,மித்தெனிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
(இரத்தினபுரி சுழற்சி நிருபர்)