சாய்ந்தமருது கடற்கரை பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பாரிய கடலரிப்பினால் இப்பிரதேசத்தில் அமைந்துள்ள பெளஸி ஞாபகார்த்த விளையாட்டு மைதானம் முழுமையாக இல்லாமல் போகும் ஆபத்தான நிைலமையொன்று ஏற்பட்டுள்ளது.
கடலரிப்பைத் தடுப்பதற்காக கடலோரத்தில் பாறாங்கற்கள் போடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த போதிலும், மழைக்காலம் ஆரம்பித்துள்ளதால் அப்பணி ஸ்தம்பிதமடைந்துள்ளது. கடலரிப்பினால் தொடர்ச்சியாக இம்மைதானம் பாதிக்கப்பட்டு வருகின்றது. சாய்ந்தமருது பிரதேசத்தில் சுத்தமான காற்றுள்ள சூழலில் உடற்பயிற்சியில் ஈடுபடுவதற்கு, ஏனைய பொது நிகழ்வுகளை நடத்துவதற்கும், விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகளை நிகழ்த்துவதற்கும் இந்த இடத்தை தவிர மாற்றுவழி இல்லாத நிலையில், இந்த மைதானத்தை அழிவிலும் சிதைவிலும் இருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மிகத் துரிதமாக மேற்கொள்ளுமாறு பிரதேச மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுள்ளனர்.
எம்.ஐ.எம்.அஸ்ஹர் – (மாளிகைக்காடு குறூப் நிருபர்)