Thursday, March 28, 2024
Home » சிறந்த வேலைத் திட்டங்களை முன்னெடுக்கும் தரப்புக்கே ஆதரவு
நாட்டில் எதிர்வரும் 5 வருடங்களுக்கான

சிறந்த வேலைத் திட்டங்களை முன்னெடுக்கும் தரப்புக்கே ஆதரவு

தயாசிறி ஜயசேக்கர எம்.பி தெரிவிப்பு

by Gayan Abeykoon
December 29, 2023 10:07 am 0 comment

மது கட்சிகளுடன் இணைந்து கொள்ளுமாறு பல்வேறு கட்சிகளும் தமக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் அது தொடர்பில் இதுவரை எந்தவித இறுதித் தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என முன்னாள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் அத்தகைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் எதிர்வரும் 05 வருட காலத்தில் நாட்டை முன்னேற்றும் வகையில் காத்திரமான வேலைத் திட்டங்களுடன் முன் செல்லும் தரப்பினருடன் இணைந்தே தாம் பயணிக்க வுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து அங்கத்துவம் இழக்கப்பட்டுள்ள நிலையிலும் தாம் இன்னும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர் என்றும் அந்த கட்சி மேற்கொள்ளும் எந்தவொரு சிறந்த தீர்மானத்திற்கும் எந்த சந்தர்ப்பத்திலும் தாம் முழுமையான ஆதரவை வழங்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT