Thursday, March 28, 2024
Home » தேவாரம் ஓதிய வயோதிபர் மயங்கி வீழ்ந்து மரணம்

தேவாரம் ஓதிய வயோதிபர் மயங்கி வீழ்ந்து மரணம்

by Gayan Abeykoon
December 29, 2023 1:00 am 0 comment

வல்வெட்டித்துறை வேவில் பிள்ளையார் ஆலயத்தில் தேவாரம் ஓதிக்கொண்டிருந்த வயோதிபர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஒழுங்கை தோட்டம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சிவப்பிரகாசம் இராசரத்தினம் (வயது -88) என தெரியவருகின்றது.

நேற்று புதன்கிழமை(27) காலை கோவிலில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்ற போது ஒலிவாங்கியில் தேவாரம் ஓதிக்கொண்டு இருந்துள்ளார்.

அச்சமயம் அவர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனடியாக அவரை வல்வெட்டித்துறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

(நாகர்கோவில் விஷேட, கரவெட்டி தினகரன் நிருபர்கள்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT