மலையக பகுதியில் கரம் விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் வகையில் மெரினாஸ் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்திருந்த திறந்த கரம் போட்டி மெராயா தேசிய கல்லூரி பிரதான மண்டபத்தில் கடந்த 26,27ஆம் திகதிகளில் நடைபெற்றது.
இப்போட்டியில் 50 விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றின. தனி நபர் போட்டியில் எஸ்.டிலான் முதலாமிடத்தையும் இரண்டாமிடத்தை பி.கபிலாஸ் பெற்றனர்.
இரட்டையர் போட்டியில் பங்குபற்றிய ஹோல்புறூக் விஞ்ஞான கல்லூரி மாணவர்களான புஷ்பராஜ் துவாரக்ஷான், சிவகுமார் பிரகதீஸ் ஆகிய இருவரும் இணைந்து மிகவும் சிறப்பாக விளையாடி அனைத்து சுற்றிலும் வெற்றிப்பெற்று.
இறுதி சுற்றுக்கு தெரிவாகி பார்வையாளர்களின் அமோக வரவேற்புடன் 2023 ஆண்டுக்கான செம்பியன் கிண்ணத்தை வெற்றிக்கொண்டனர். இவர்களுக்கு பணப்பரிசாக 10 ஆயிரம் ரூபாவும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான கிண்ணங்கள் மற்றும் செம்பியன் கிண்ணத்தையும் தனதாகி கொண்டனர்.
(ஹற்றன் விசேட நிருபர்)