Tuesday, April 23, 2024
Home » கலேவல அல் புர்கானில் 75 வருட பூர்த்தி விழா நிகழ்வுகள்

கலேவல அல் புர்கானில் 75 வருட பூர்த்தி விழா நிகழ்வுகள்

by Gayan Abeykoon
December 29, 2023 7:07 am 0 comment

மா த்தளை மாவட்டம், கலேவல கல்வி வலயத்திற்குட்பட்ட கலேவல அல் புர்கான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 75 வருட பூர்த்தியை முன்னிட்டு பவள விழா கொண்டாட்ட நிகழ்வுகள் பாடசாலை மண்டபத்தில் வெகு விமரிசையாக அண்மையில் இடம்பெற்றது. வித்தியாலய அதிபர் டபிள்யூ.எம். ஸமீர் தலைமையில் தொடர்ந்து மூன்று தினங்களாக இவ்விழா நடைபெற்றது. முதல் நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட சிம்சா லங்கா நிறுவனத்தின் தலைவரும் தொழில் அதிபருமான அல்ஹாஜ் ஏ.எஸ். கலீல் பாடசாலைக்கு புதிய கட்டிடத்துக்கான அடிக்கல்லை நட்டி வைத்தார்.

இரண்டாம் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கலாநிதி அலவி சரீப்தீன் பத்து பாடசாலைகளுக்கான விளையாட்டு உபகரணங்களையும் வழங்கி வைத்தார். விழாவில் மாணவர்களின் கல்வி கண்காட்சி மற்றும் பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெற்றன. நிகழ்வில் பாடசாலை அதிபர்கள், கல்வி அதிகாரிகள், ஊர் பிரமுகர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர். பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம் ஆகியவற்றின் பூரண ஒத்துழைப்புடன் இவ்விழா சிறப்பாக நடைபெற்றமை விசேட அம்சமாகும்.

படமும் தகவலும்:

எம்.சதூர்தீன் (மாத்தளை சுழற்சி நிருபர்)

1-1

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT