சட்டவிரோதமான முறையில் உள்நாட்டில் தயாரித்த துப்பாக்கியொன்றினை பயன்படுத்தி குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவரை ஹொரவப்பொத்தான பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றுக்கமைய கடந்த செவ்வாய்க்கிழமை (26) பகல் ஹொரவப் பொத்தான பொலிஸ் பிரிவின் மொறகேவ பகுதியில் நடத்திய சுற்றிவளைப்பின்போது சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன் உள்நாட்டில் தயாரித்த துப்பாக்கியொன்றையும் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 54 வயதுடைய கம்மஹெவாவெவ மொறகேவ பகுதியை வசிப்பிடமாக கொண்டவர் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரவப்பொத்தான பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் பல கோணங்களிலும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அநுராதபுரம் தினகரன் நிருபர்